தென்காசி திமுக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்.!! - Seithipunal
Seithipunal


தென்காசி திமுக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்.!!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் வன்முறையில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாணமாக சாலையில் அழைத்துவந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடைபெறுகிறது.

இந்த நிலையில், நேற்று தென்காசி மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலந்துகொண்டு பேசினார். 

அதன் பின்னர் அவர், மழை வருவது போன்று உள்ளதால், கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை தொடருங்கள் என்று கூறி விட்டு மேடையில் இருந்து இறங்க முயநின்றுள்ளார். அப்போது அவரிடம் இருந்த மைக்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி பிடுங்கியவாறு மணிப்பூரை பற்றி நீங்கள் என்ன பேசுகிறீர்கள்? என்று ஆவேசமாக சத்தம் போட்டுள்ளார். 

இதற்கு அங்கிருந்த மற்ற நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இரு தரப்பினரையும் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சமாதானப்படுத்தினார். இதைத்தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் மாவட்ட பஞ்சாயத்து தலைவியை சம்பவ இடத்திலிருந்து அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், தென்காசி தி.மு.க. மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இந்த தகவலை கட்சியின் பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

மேலும், கட்சியின் மகளிரணி ஆர்ப்பாட்டத்தின் போது, பெண் நிர்வாகியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக ஜெயபாலன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tenkasi dmk district secretary dismiss from party


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->