ஆசிரியர்களுக்கு மறு உயிர் தந்த தொடக்கக் கல்வி இயக்குனர்: அலுவலர் மீது நடவடிக்கை.!
Teachers no salary deduction
திண்டுக்கல், வடமதுரை ஒன்றியத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை 19 நாட்கள் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் கிடையாது என தொடக்க கல்வ இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், 19 நாட்களும் விடுமுறை நாட்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
English Summary
Teachers no salary deduction