குடிமகன்களுக்கு ஷாக்.. தமிழகத்தில் மீண்டும் உயருகிறது டாஸ்மாக் மதுபான விலை.!!
tasmac Liquor prices rise again in Tamil Nadu
தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மார்க் நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள 4000 மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் கோடிக்கு மேல் டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லறை விற்பனை மூலம் வருமானம் ஈட்டும் தமிழக அரசு சமீபத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்தியது.
பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்ட இந்நிலையில் தற்போது மீண்டும் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
tasmac Liquor prices rise again in Tamil Nadu