10 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை..! அதிர்ச்சியில் குடிமகன்கள்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் இருக்கும் அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் வருடம் தோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

அது போலவே இந்த ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழாவானது டிசம்பர் 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க இருக்கின்றது. அதன் பிறகு 10 நாட்கள் உற்சவம் நடைபெறும்.

டிசம்பர் 10ம் தேதி கோவில் வளாகத்தில் அதிகாலை பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 4 மணி அளவில் 2668 அடி உயரத்தில் இருக்கும் அண்ணாமலை உச்சியில் பிரசித்தி பெற்ற மகாதீபம் ஏற்றப்படும்.

இதனை கண்டு களிக்க பல ஊர்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து மக்கள் ஆயிரக் கணக்கா லட்சக்கணக்கில் திரள்வது வழக்கம். இந்நிலையில், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்கவும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்ட உள்ளனர்.

கார்த்திகை தீப நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தீபத் திருநாளை முன்னிட்டு டிசம்பர் 1 முதல் 10 ஆம் தேதி வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மது கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac leave for 10 days in this district


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->