கொடைக்கானலுக்குச் சென்ற தமிழக இளைஞர் ஒடிசாவில் கொலை - நடந்தது என்ன?
tamilnadu youth murder in odisa
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புல்லரம் பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் ஹரி - ஜோதி தம்பதியினர். இவர்களின் இரண்டாவது மகன் அஜய், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், அஜய் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி கொடைக்கானல் சுற்றுலா செல்வதாக கூறிவிட்டு செங்குன்றத்தை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அபினேஷுடன் ஒடிசா சென்றுள்ளார்.
அங்கு மூன்று கிலோ கஞ்சா வாங்கி பயன்படுத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் ஊர் திரும்பும்போது அங்குள்ள கும்பலிடம் சிக்கியுள்ளனர். அதில் அபினேஷ் மட்டும் தப்பியுள்ளார். அதனால், அந்த கும்பல் அஜய்யிடம் ரூ.5 லட்சம் கொடுத்தால் மட்டுமே உயிருடன் விடுவதாக மிரட்டியுள்ளது.
இதையடுத்து அஜய் சம்பவம் குறித்து பெற்றோரிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். ஆனால், அஜய் குடும்பத்தினர் இந்த விவகாரத்தை காவல்துறை வரையிலும் எடுத்துச் சென்றனர். இதற்கிடையே, அஜய் கொலை செய்யப்பட்டதாக அபினேஷ் மூலம் அஜய்யின் பெற்றோர் அறிந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அஜய்யின் பெற்றோர் தனது உறவினர்களுடன் அவரது உடலை மீட்டுத் தரக்கோரி திருவள்ளூர் - புல்லரம்பாக்கம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர். தொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
tamilnadu youth murder in odisa