தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ அடுக்குகளில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்று முதல் 01.04.2024 வரை தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

02.04.2024 மற்றும் 4.4.2024 ஆம் தேதிகளில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வடதமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று முதல் 02.04.2024 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கும். 

சென்னையை பொறுத்த வரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலையாக 34-35 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26-27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் 4 சென்டிமீட்டர் மழையும் தென்காசி மாவட்ட பகுதிகளில் 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu weather report 29032024


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->