தமிழகம் முழுவதும் இன்று 50,000 இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் 34-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது. 

கொரோனா நோயை கட்டுப்படுத்தும் பொருட்டு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த முகாம்களில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசியும், 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை செலுத்தி 6 மாதம் கடந்தவர்கள் அனைவருக்கும் முன் எச்சரிக்கை தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியும் இலவசமாக செலுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 21) தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் 34-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் எந்தவித அச்சமும் இன்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனாவின் 4-ம் அலையில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu today mega Vaccination camp


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->