BREAKING: இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை- அமைச்சர் மா.சுப்ரமணியன்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்திருந்தது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு. அந்த வகையில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் சில  கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு.

இந்நிலையில் ஞாயிறு முழு ஊரடங்கான இன்று அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் இயங்காது. டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காய்கறி-மளிகை கடைகள், இறைச்சி கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் போன்றவையும் செயல்படாது.

அத்தியாவசியமான மருத்துவம், பால், மற்றும் பத்திரிக்கை பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், வெளியூரிலிருந்து தொலைதூர பேருந்துகள் ரயில்களில் வரும் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் ஆட்டோ வாடகைக்காரர்கள் நிபந்தனைகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்தால் வரும் வாரங்களில் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு இருக்காது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Sunday lockdown possible to cancel


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->