70 நாட்களுக்கு பிறகு தமிழகம் - புதுச்சேரி பேருந்து சேவை தொடக்கம்... பயணிகள் மகிழ்ச்சி.!
Tamilnadu Pondicherry Bus Service Started 12 July 2021
தமிழ்நாடு - புதுச்சேரி இடையே 70 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவைகள் தொடங்கியது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை தாக்கத்தால் கடந்த ஏப்ரல் மாதம் மக்களுக்கு ஊரடங்கு தளர்வுகளில் இருந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, தற்போது குறைந்து வந்த இரண்டாவது அலையின் காரணமாக மக்களுக்கு பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தளர்வுகளின் எதிரொலியாக பேருந்து சேவையை தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டது. முதலில் தமிழகத்திற்கு உள்ளே மாவட்ட அளவுகளில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மாநிலங்களுக்கு இடையேயானன பேருந்து சேவை தொடங்கியுள்ளது.
தமிழகம் - புதுச்சேரி இடையே பேருந்து சேவையை தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இன்று காலை முதல் கடலூர் மத்திய பேருந்து பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேவை தொடங்கியுள்ளது. இதனைப்போல, புதுச்சேரி வழியாக செல்லும் பல இணைப்பு பேருந்துகளும், புதுச்சேரி வழியே பயணித்து தங்களின் இலக்கை சென்றடைந்தது.
பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தங்களின் பயணத்தை மேற்கொண்டனர். தமிழகத்தில் பேருந்துகள் இயங்கிய போது புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடங்கப்படாத காரணத்தால், விழுப்புரம் வழியாக தமிழக பேருந்துகள் மாற்று பாதையில் பயணம் செய்தது. தற்போது, புதுச்சேரி - தமிழகம் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளதால், பழைய வழித்தடத்திலேயே பேருந்துகள் இயக்கப்படுகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tamilnadu Pondicherry Bus Service Started 12 July 2021