அரசுமருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கியது தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு..!
Tamilnadu Govt School Teachers Committee Gives medical Equipment to Govt Hospital Tiruppur
அரசு மருத்துவமைனைக்கு 1 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை வழங்கியது தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு..
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் உள்ள அரசுமருத்துவனைகளுக்கு அந்த பகுதியில் உள்ள தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு உபகரணங்கள் முடிவுசெய்திருந்தது. இந்நிலையில் ஞாயிற்றுகிழமை அதற்கான விழாவை ஏற்ப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் காங்கேயம் அரசுமருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் செய்திதுறை அமைச்சர். மு.ப. சாமிநாதன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ். வீனித் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனைகளுக்கு தேவையான ஈசிஜி இயந்திரம் மற்றும் ஈசிஜி ட்ராலி போன்ற மருத்துவ உபகரணங்கள் வழங்கபெற்றது.
இதன் மதிப்பு ரூ1 லட்சத்து 10 ஆயிரம் ஆகும். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு ஆரம்ப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில துணை தலைவர் தோ. ஜான் கிறிஸ்துராஜ் மற்றும் கல்வி மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
English Summary
Tamilnadu Govt School Teachers Committee Gives medical Equipment to Govt Hospital Tiruppur