தனியார் மருத்துவமனைக்கு விரைந்த தமிழக ஆளுநர்... பரபரப்பாகும் வட்டாரங்கள்.!!
Tamilnadu Governor Went Chennai Kavery Hospital due to Body Check Up
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் தினமும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், களப்பணியாற்றும் பலருக்கும் கொரோனா உறுதியாகி சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனையில்உடல் நல பரிசோதனை அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வயது காரணமாக இயல்பான பரிசோதனைக்கு வந்துள்ளாரா? அல்லது கொரோனா தொடர்பான சிகிச்சை அல்லது பரிசோதனைக்கு வந்துள்ளாரா? என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.
மேலும், ஆளுநர் மாளிகையில் பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனியார் மருத்துவமனைக்கு விரைந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநரின் உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதியாகியிருந்த நிலையில், ஆளுநருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில், ஆளுநர் தற்போது தனியார் மருத்துவமனைக்கு விரைந்துள்ளது மக்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tamilnadu Governor Went Chennai Kavery Hospital due to Body Check Up