#Breaking: இன்று 5,175 பேருக்கு கொரோனா உறுதி.. மகிழ்ச்சியை தரும் குணமடைவோர் எண்ணிக்கை.!!
Tamilnadu Corona virus Update 8 August 2020
தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று கொரோனாவால் 5,175 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்ந்துள்ளது. இன்று 6,031 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 2,14,815 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 112 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 4,461 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியான பட்டியலில், சென்னையில் இன்று மேலும் 1,044 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,004 ஆக உயர்ந்துள்ளது.
English Summary
Tamilnadu Corona virus Update 8 August 2020