#Breaking: இன்று 5,875 பேருக்கு கொரோனா உறுதி.. பலி எண்ணிக்கை உயர்வு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா பரவலின்  காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வருகிறது. மேலும் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

நேற்றுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,51,738 ஆக இருந்தது.. இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 1,90,966 ஆக இருந்தது.. மொத்த பலி எண்ணிக்கை 4,034 ஆக இருந்தது.

இந்த நிலையில், இன்று கொரோனாவால் 5,875 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,57,613 ஆக உயர்ந்துள்ளது. இன்று 5,517 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 1,96,483 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 98 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 4,132 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியான பட்டியலில், அதிகபட்சமாக சென்னையில் ஏற்கனவே 1,00,877 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இன்று மேலும் 1,065 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,01,951 ஆக உயர்ந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Corona virus Update 2 August 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->