த.வ.ச.பே - சி.ஐ.டி.யு லடாய்... காரசார விவாதம் சண்டையானதால், மண்டை உடைந்தது.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் சி.ஐ.டி.யு தொழிலாளர்களுக்கு இடையே நடந்த மோதலில், ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது. 

திருச்சியில் உள்ள பழைய பால்பண்ணை ரவுண்டானாவில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் புதிய லாரி புக்கிங் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த புக்கிங் அலுவலகத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று சி.ஐ.டி.யு சுமை தூக்கும் தொழிலாளர்களில் ஒரு தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற வணிக சங்க பேரமைப்பு கட்டிடத்திற்குள் சென்ற சி.ஐ.டி.யு தொழிலாளர்கள், லாரி புக்கிங் அலுவலகத்தில் இருந்த வியாபாரிகள், லாரி புக்கிங் உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில், வாக்குவாதம் மோதலாக மாறி கண்ணன் என்பவரின் மண்டை உடைக்கப்பட்டது. மேலும், அலுவலக வாசலில் அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CITU TVSP Fight at Trichy Police Investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->