பிரதமரின் தாயார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் தயார் ஹீராபென் மோடி, குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகர் ரேசானில் பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ள தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் வசித்து வந்தார். 

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை இவர் சிகிச்சை பலனிறி உயிரிழ்ந்தார். இதையறிந்த பிரதமர் மோடி அவசர அவசரமாக அகமதாபாத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். 

இருப்பினும், பிரதமர் மோடி, ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகளில் காணொளி கட்சி மூலமாக மூலமாக கலந்துகொள்வார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில், பிரதமரின் தாயார் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, 

"அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி, உங்கள் அன்புக்குரிய தாயார் ஹீராபாவுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிகரமான பிணைப்பை நாங்கள் அனைவரும் அறிவோம். ஒரு தாயின் இழப்பை யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது. உங்கள் இழப்புக்காக நான் மிகவும் வருத்தமடைகிறோம். 

என்னுடைய வருத்தத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்த நேரத்தில் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அம்மாவுடன் நீங்கள் இருந்த நினைவுகளில் அமைதியையும் ஆறுதலையும் பெறுவீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu chief minister stalin condoles to pm modi mother died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->