அனைத்து மாவட்டத்திற்கும் இம்முறையில் தான் சென்று வருகிறேன் - தமிழக முதல்வர் பேச்சு.!! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கவும், பிற நலத்திட்டங்கள் போன்றவற்றை வழங்கவும் தமிழக முதல்வர் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நேரடியாக சென்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

அக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர், உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பரவியுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் கடுமையான அளவு பாதிக்கப்பட்ட போதிலும், அரசு மக்களுக்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. 

கண்களுகே தெரியாத வைரஸுடன் அனைவரும் போராடி வருகிறோம். மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத்துறையின் அறிவுரையை அரசு செயல்பட்டு வருகிறது. 

மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கு நான் செல்லும் போது, நான் மற்றும் என்னுடன் வருபவர்கள் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர். ஏனென்றால் நம்மிடம் இருந்து கொரோனா பிறருக்கு பரவிவிடக்கூடாது. 

கொரோனா வைரஸ் பலருக்கும் அறிகுறிகள் இன்றி உறுதியாகிறது. கொரோனா சோதனை செய்யப்பட்ட பின்னரே, பலருக்கும் கொரோனா பரவியுள்ளது உறுதியாகியிருக்கிறது " என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Chief Minister Edappadi Palanisamy Speech in Nagapattinam Meeting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->