தமிழகத்தில் பாமகவை தொடர்ந்து பாஜக எடுத்த அதிரடி முடிவு!
Tamilnadu bjp decide not participate in media debates
தமிழகத்தில் மக்களை எந்நேரமும் பரபரப்பாகவே வைத்து இருப்பதற்காகவோ என்னவோ, ஊடகங்கள் தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறது. ஊடகங்களுக்கும் தேவையான தீனியினை அவ்வப்போது அரசியல் கட்சிகளும் அளித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் ஊடகங்கள் ஒரு சார்பு தன்மையுடன் செயல்படுவதாகவும், அங்கே பணிபுரிபவர்கள் திட்டமிட்டு சில இயக்கத்தின் மீது விஷமத்தினை விதைப்பதாகவும் அண்மை காலமாக அதிகப்படியான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. முதன்மை ஊடகங்களில் திட்டமிட்டு சில இயக்கங்களின் செயல்பாடுகள் இருட்டடிப்பு செய்யப்படுவது போல, சில இயக்கத்தின் செய்லபாடுகளை அதிகப்படுத்தி பேசுவதும் என தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.
இதனை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊடகங்களில் நடுநிலைத்தன்மை திரும்பும்வரை பாட்டாளி மக்கள் கட்சியினர் ஊடக விவாத நிகழ்ச்சிகளில், நேரலைகளில் கலந்து கொள்ளமாட்டார்கள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக அந்த பட்டியலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவிப்பும் இணைந்துள்ளது. தமிழக பாஜக சார்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொலைக்காட்சி அரசியல் விவாதங்கள் கட்சிகளின் நிலைப்பாடு கருத்துகளையும் மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளது. ஆனால் சமீபகாலமாக விவாதங்களில் சமநிலையையும் சம வாய்ப்பும் இல்லாததால் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமகவை தொடர்ந்து பாஜகவும் ஊடக புறக்கணிப்பை செய்துள்ளது. மேலும் சில இயக்கங்கள் புறக்கணிப்பு செய்தால் ஊடகங்களின் பாடு திண்டாட்டம்தான்.
English Summary
Tamilnadu bjp decide not participate in media debates