மற்ற கட்சிகளையும் மதிக்க வேண்டும் - விஜய்க்கு அறிவுறுத்திய தமிழிசை.! - Seithipunal
Seithipunal


தமிழக பா.ஜ.கவின் மூத்த தலைவரும், தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது,

"விஜய் தனது மாநாட்டு கடிதத்தில் மற்ற கட்சிகளைப் போல் நாம் சாதாரண கட்சி அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். எத்தனையோ கட்சிகள் ஆண்ட கட்சிகளாக இருக்கின்றன. பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கின்றன. 

உங்கள் கட்சி புதிய கட்சி. அதனை உயர்வாக சொல்வதில் தவறில்லை அதே நேரத்தில் மற்ற கட்சிகளையும் அதன் தலைவர்களையும் மதிக்க வேண்டும். இப்போது ஒரு குட்டி திராவிட கட்சியைப் போலத்தான் விஜயின் கட்சியும் உள்ளது.

பெரியாரையும் கும்பிடுகிறார்கள்; கடவுளையும் கும்பிடுகிறார்கள். நேரம் காலம் பார்த்துதான் எல்லாவற்றையும் செய்கிறார்கள்; அதாவது தி.மு.க. எதை செய்கிறதோ அதே போலத்தான் விஜய்யின் கட்சியும் செய்கிறது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tamilisai speech about vijay


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->