ஜாபர் சாதிக்கிற்கு புதுச்சேரியுடன் தொடர்பு.!! பகீர் கிளம்பிய தமிழிசை.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி முத்தையால் பேட்டையில் ஒன்பதாம் தேதி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவசர ஆலோசனை நடத்தினார்.

அதன் பிறகு செய்தியாளர் வேலை சந்தித்த ஆளுநர் தமிழிசை "சிறுமியின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்படுகிறோம். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இனி இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க புகார் வந்தால் தீவிர நடவடிக்கை எடுக்குமாறும் , போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்.

போதைப் பொருள் நடமாட்டத்தில் தமிழகத்தின் சார்பா சாதிக் கூட்டாளிகள் புதுச்சேரியில் உள்ள அரசியல் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்களாக இருக்கிறார்கள். அந்தக் கட்சியை புதுச்சேரியில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக குற்றம் சாட்டுகிறது. போதை பொருள் கடத்துபவர்களுக்கு ஆதரவும் தருகிறது. தற்போது குற்றம் சாட்டு ஓர் இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்கள் தான், தற்போது தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர் தான்" என பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilisai alleged Jaffar Sadiq Link with Puducherry political party


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->