தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு ரயில் சேவை இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் முக்கிய விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்லும் பொது மக்களின் நலன் கருதி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 13ஆம் தேதி மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு கண்ணூர் சென்றடைகிறது.

அதனைத் தொடர்ந்து மறு மார்க்கமாக கண்ணூரில் இருந்து ஏப்ரல் 14ஆம் தேதி காலை 8.35 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10:35 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்துடைகிறது.

மேலும், இந்த சிறப்பு ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் வழியாக செல்கிறது. இந்த சிறப்பு ரயில் சேவைக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil new year special train Chennai to Kannur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->