ரயில்வே சேவையில் திடீர் மற்றம் -தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்..! - Seithipunal
Seithipunal


 தெற்கு ரயில்வே  முன்பதிவு இல்லாத பயணியர் பயன் பெறும் வகையில், 24 விரைவு ரயில்களின் சேவையில், மாற்றம் செய்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது:

முன்பதிவு இல்லாத பயணியர்களின் எண்ணிக்கை தெற்கு ரயில்வேயின் பல்வேறு வழித்தடங்களில், அதிகரித்து வரும் நிலையில், பயணியர்கள்  பயன் பெறும் வகையில், தேர்வு செய்யப்பட்ட 24 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ரயில்களின் தடத்தில், ஒரு பகுதியில் மட்டும் சில பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரல் - கர்நாடகா மாநிலம் மங்களூர், எழும்பூர் - ராமேஸ்வரம், ராமேஸ்வரம் - எழும்பூர், எழும்பூர் - கேரளா மாநிலம் கொல்லம், துாத்துக்குடி - கர்காடகா மாநிலம் மைசூர், சென்ட்ரல் - நாகர்கோவில் உள்ளிட்ட விரைவு ரயில்களில், ஓரிரு பெட்டிகள் மட்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.வரும் அக்டோபர் பதினைந்து முதல் படிப்படியாக அமலாகும்.என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sudden change in railway service - Southern Railway officials inform..!


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->