புறநகர் ரயில்களில் விருப்பம் போல் பயணம் செய்யும் முறை! மீண்டும் நடைமுறைப்படுத்தியது தெற்கு ரயில்வே.! - Seithipunal
Seithipunal


சென்னை புறநகர் ரயில்களில் விருப்பம் போல் பயணம் செய்யும் சுற்றுலா சேவை பயணச்சீட்டு வழங்கும் முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில் பயணங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனா தொற்று பரவல் பெருமளவு குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை புறநகர் ரயில்களில் விருப்பம் போல் பயணம் செய்யும் சுற்றுலா சேவை பயணச்சீட்டு முறையும் மீண்டும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடம், சென்னை கடற்கரை முதல் திருவள்ளூர் வரையிலான வழித்தடம், சென்னை கடற்கரை, கும்மிடிப்பூண்டி வழித்தடம், டென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் விருப்பம் போல் பயணிக்க முடியும். 

இதற்காக ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் பயணம் செய்யும் வகையிலான பயணச்சீட்டுகளை பெறலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பயணக்கட்டணத்தை பொருத்தவரை நாள்களின் அடிப்படையில் பெரியவர்களுக்கு 70 ரூபாய் 575 ரூபாய் வரையும், சிறியவர்களுக்கு 45 ரூபாய் முதல் 330 ரூபாய் வரையிலும் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suburban trains tourist service ticket


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->