பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர்.! வேலுரில் சோகம்.!
Sub Inspector death in vellore
வேலூர் பகுதியில் சத்துவாச்சாரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மிகவும் உடல்நலகுறைவு ஏற்ப்பட்டு பரிதாபமாக உயிரிழந்து இருக்கின்றார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கின்ற காமக்கூர் எனும் கிராமத்தில் செல்வராஜ் என்ற நபர் வசித்து வந்து இருக்கின்றார். இவருக்கு கோமதி எனுக் மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். இதில் செல்வராஜ் வேலூர் மாவட்டத்தில் இருக்கின்ற சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி கோமதி வேலூர் காவல் பயிற்சி மையத்தில் காவலராக பணிபுரிந்து வருகின்றார்.
இத்தகைய சூழலில், செல்வராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால், வேலூரில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்.
இதனை தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் சுயநினைவை இழந்ததால் கோமா நிலைக்கு சென்றுள்ளார். இதன் பின்னர், மருத்துவர்கள் செல்வராஜுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும், செல்வராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
English Summary
Sub Inspector death in vellore