திமுக எம்பியின் பல்கலைக்கழகத்தில் நேற்று மாணவி, இன்று மாணவன் அடுத்தடுத்து தற்கொலை! பதற்றத்தில் பல்கலைக்கழக வட்டாரம்!
student suicide in srm university
சென்னை அடுத்த, காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூர், பொத்தேரியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இன்றும் ஒரு மாணவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது,
இதே எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நேற்று ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று ஒரு மாணவர் தற்கொலை செய்தது பல்கலை கழக வட்டாரத்தில் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.
நேற்று பொன்னேரியை சேர்ந்த மாணவி 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று ஜார்க்கன்டை சேர்ந்த மாணவர் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் அடுத்தடுத்து 2 நாட்களில் 2 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை தொடங்கியுள்ளார்கள்.
இந்த பல்கலைக்கழகம் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சமுத்துவிற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
student suicide in srm university