படிக்கிற வயதில் மதுவுக்கு அடிமையான சிறுவன், சாலையில் சென்றவர்களுடன் தகராறு..! - Seithipunal
Seithipunal


சாலையில் சென்றவர்களை மதுபோதையில் சிறுவன் தகராற்றில் ஈடுப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலில் பேருந்து நிலையம் அருகே 15 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்நிலையில், அந்த சிறுவன் மதுபோதையில் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் தகராற்றில் ஈடுப்பட்டார். மேலும், சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை போதையில் தாக்க முற்பட்டார்.அப்போது, அங்கிருந்தவர்கள் சிறுவனை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். 

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சிறுவனை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படிக்கின்ற வயதில் மதுபோதைக்கு அடிமையாகி சாலையில் சென்று கொண்டிருந்தவர்களுடன் சிறுவன் சண்டையிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் சமுதாயம் மதுவிற்கு அடிமையாகி அவர்களின் வாழ்க்கையை கேள்வி குறியாக்குவது கவலையளிப்பதாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Student Drink alcohol and Fight with pepole


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->