தந்தை திட்டியதால் மனமுடைந்த மாணவன் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


தந்தை திட்டியதால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகே உள்ள சின்ன ஆண்டான்கோவில் பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவருக்கு திருமணமாகி சபரி (17) என்ற மகன் இருக்கிறான். சபரி அங்குள்ள பள்ளி  ஒன்றில் 10 வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில், சபரி படிக்காமல் தனது நண்பர்களுடன் ஊர்சுற்றியதாக கூறப்படுகிறது. இதனால், சரவணன் மகனை கண்டித்துள்ளார். தந்தை திட்டியதால் சபரி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவதன்று, தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளான். இதனை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

student committed suicide Near Karur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->