தந்தை திட்டியதால் மனமுடைந்த மாணவன் எடுத்த விபரீத முடிவு..!
student committed suicide Near Karur
தந்தை திட்டியதால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அருகே உள்ள சின்ன ஆண்டான்கோவில் பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவருக்கு திருமணமாகி சபரி (17) என்ற மகன் இருக்கிறான். சபரி அங்குள்ள பள்ளி ஒன்றில் 10 வகுப்பு படித்து வருகிறான்.
இந்நிலையில், சபரி படிக்காமல் தனது நண்பர்களுடன் ஊர்சுற்றியதாக கூறப்படுகிறது. இதனால், சரவணன் மகனை கண்டித்துள்ளார். தந்தை திட்டியதால் சபரி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவதன்று, தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளான். இதனை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
student committed suicide Near Karur