அந்தர் பல்டி அடித்த தெற்கு ரயில்வே.! வெளியான அதிர்ச்சி காரணம்.!
south railway withdraw circular
மதுரையை அடுத்த திருமங்கலத்தில் கடந்த மே மாதம் 9-ஆம் தேதி மதுரை - செங்கோட்டைக்கு இடையே இயக்கப்படும் இரு தொடர்வண்டிகள் ஒரே பாதையில் எதிரெதிரே வந்தன. அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு அந்த வண்டிகளை தடுத்து நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இரு தொடர்வண்டி நிலைய அதிகாரிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பில், மொழிப்பிரச்சினை காரணமாக ஏற்பட்ட குழப்பம் தான் அனைத்துக்கும் காரணம் என்று கூறி சம்பந்தப்பட்ட இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அதுபோன்ற குழப்பங்கள் மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது; ஒருவர் பேசுவது மற்றவருக்கு தெளிவாக புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அனைத்து உரையாடல்களும் இந்தி அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். தமிழில் பேச தடை விதிக்கப்பட்டது என ஆணையிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
இது இந்தி திணிப்பு என பல அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்பொழுது தமிழில் பேச தடை இல்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
English Summary
south railway withdraw circular