செலவுக்கு பணம் கேட்ட தந்தை.! அடித்து கொன்ற மகன் கைது.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் செலவுக்கு பணம் கேட்ட தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் அமரப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (80). இவரது மகன் கூலி தொழிலாளி ராமராஜ். இந்நிலையில் ராமசாமியால் எந்த வேலைக்கும் செல்ல முடியாததால், செலவுக்கு மகனிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார்.

ஆனால் ராமராஜ் பணம் தராததால், இவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து இன்றும் ராமசாமி, மகனிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் பணம் தர மறுத்த ராமராஜ் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் இவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த ராமராஜ் தந்தையை அடித்து கீழே தள்ளியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த ராமசாமியை அருகில் இருந்தவர்கள் மீது சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ராமசாமி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தந்தையை அடித்து கொலை செய்த மகனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Son arrested for beating father to death in Dindigul


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->