லீவு ல பாத்திரம் கழுவ நல்லா கத்துக்கிட்டேன்.. எங்க அம்மா இருக்கே... மழலையின் கம்பளைண்ட் வீடியோ.!
Social Media Video Trend about baby Want school Opening
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக பள்ளிகள் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு இணையவழியிலும், கல்வி தொலைக்காட்சி வழியிலும் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. இது தொடர்பான வீடியோவில், சிறுமி ஒருவர் பாத்திரத்தை கழுவுகிறார். அந்த சிறுமி கூறுகையில், " இப்படியே விடுமுறை அறிவித்து விடுங்கள். பள்ளியை திறக்காதீர்கள்.
நான் எப்படி படிப்பது?. இந்த விடுமுறையில் எத்தனை கற்றுக்கொண்டேனோ இல்லையோ., பாத்திரம் கழுவ நன்றாக கற்றுக்கொண்டேன். எனது அம்மா என்னை நன்றாக வச்சி செய்கிறார்கள். இப்படியே விடுமுறை அறிவியுங்கள் " என்று ஆதங்கத்தை மழலை மொழியில் தெரிவிக்கிறார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Social Media Video Trend about baby Want school Opening