புதுச்சேரி - தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீரென வந்த புகை - பயணிகள் அலறியடித்து ஓட்டம்.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி - தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீரென வந்த புகை - பயணிகள் அலறியடித்து ஓட்டம்.!!

புதுச்சேரியில் இருந்து மும்பைக்கு ஞாயிறு, செவ்வாய், புதன் உள்ளிட்ட கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வழக்கம் போல் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் இரவு 7.15 மணிக்கு வந்தது. 

அங்கு ரெயிலில் இருந்து பயணிகள் இறங்கியவுடன் ரெயில் பெட்டிகளை ரெயில்வே ஊழியர்கள் பூட்டினர். இந்த நிலையில் நேற்று பிற்பகல் மூன்று மணி அளவில் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் இருந்து திடீரென புகை வந்தது. 

இதை பார்த்த ரெயில்வே ஊழியர்கள் மற்றும் ரெயில்வே போலீசார் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்தத் தகவலின் படி தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்து தீ விபத்து ஏற்பட்ட ரெயில் பெட்டி அருகே சென்று பார்த்தனர்.

அப்போது, தீ விபத்து ஏற்பட்டால் அதனை அணைப்பதற்கு ரெயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டு இருக்கும் தீயணைப்பான் கருவியில் இருந்து புகை வெளியேறியது தெரியவந்தது. ரெயில் பெட்டியில் இருந்த தீயணைப்பான் கருவியை மர்ம ஆசாமி யாரோ திறந்துவிட்டுள்ளனர்.

இதனால் தான் அதிலிருந்து புகை வந்துள்ளது என்பது தெரியவந்தது. உடனே ரெயில்வே போலீசார் தீயணைப்பான் கருவியை திறந்து விட்ட ஆசாமி யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் பெட்டியில் இருந்து திடீரென்று புகை வந்ததை பார்த்து பயணிகள் அலறியடித்து ஓடிய சம்பவத்தால் புதுவை ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

smoke come from dhadhar express train in puthuchery railway station


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->