தொடர் கனமழையால்.. ஒரே நாளில் உச்சத்தை தொட்ட வெங்காயத்தின் விலை.! - Seithipunal
Seithipunal


சாம்பார் வெங்காயத்தின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு 50 ரூபாய் அதிகரித்துள்ளது.

உணவுப் பொருள்களின் அத்தியாவசியமான பொருளாக இருப்பது வெங்காயம் மற்றும் தக்காளி. இதில், தக்காளி தமிழகத்தில் ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், தர்மபுரி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் விளைகிறது. மேலும் ஆந்திரா, கர்நாடகா தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு தக்காளி விற்பனைக்கு வருகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக பெய்து வரும் மழை காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது.

அதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. இதில், தக்காளியின் விலை ஒரு வாரமாக 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் இன்று தக்காளியின் விலை கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை 120 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 140 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தக்காளியை தொடர்ந்து சாம்பார் வெங்காயத்தின் விலை இன்று ஒரே நாளில் கிலோவுக்கு 50 ரூபாய் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு கிலோ சாம்பார் வெங்காயத்தின் விலை ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. அடுத்தடுத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Small onion price increase in koyambedu market


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->