காஞ்சிபுரம் : நீச்சல் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு.!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் : நீச்சல் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு.!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை அருகே நீலமங்கலம் பாரதியார் தெரு பகுதியை சேர்ந்தவர்கள் நந்தகுமார்-தாரிகா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், தாரிகா தனது மகன்களை நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள தனியார் நீச்சல் குளத்திற்கு நீச்சல் பயிற்சிக்காக அழைத்து சென்றார். 

அதன் பின்னர் தாரிகா தனது இளைய மகனுக்கு உணவு கொடுப்பதற்காக சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது மூத்த மகனைக் காணவில்லை. இதனால், பதறிப்போன தாரிகா தன்னுடைய மகனை தேடியுள்ளார். அப்போது, நீச்சல் குளத்தில் தன்னுடைய மகன் மூழ்கி கிடப்பதை பார்த்து அலறி துடித்தார். 

இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர். 

அந்த புகாரின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று விசாரணை நடத்தி பாதுகாப்புகள் இல்லாமல் இயங்கியதாக சம்பந்தப்பட்ட நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six years old boy died in kanchipuram swimming pool


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->