மின்கம்பியில் தென்னை மட்டை விழுந்த தகராறு.. கொடூரமாக கொன்ற 66 வயது மூதாட்டி உள்ளிட்டோர் கைது.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை அரங்கேறி இருக்கும் நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வீரவலசை எனும் கிராமத்தில் முத்து விஜய் மற்றும் முனியசாமி என்ற இருவரும் அருகருகே இருந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்கள். இந்த நிலையில், மின் கம்பி மீது தென்னை மட்டை விழுந்த காரணத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் அண்டை வீட்டுக்காரர்களான இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், முத்து விஜய் தனது மகன் மற்றும் மூதாட்டி ஏலம்மாள் ஆகியோர்டன் சேர்ந்து முனியசாமியை கொன்றுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மூதாட்டி ஏலம்மாள் மற்றும் முத்து விஜய் இருவரையும் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து, தலைமறைவாக இருந்த முத்து விஜயின் மகன் செல்வம் தானாகவே சிவகாசி நீதிமன்றத்தில் சரணடைந்து இருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SIVAKANGAI MEN KILLED BY 3 FOR FIGHTING ABOUT POWER ISSUE


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->