சிவகங்கை | பேக்கரியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து! ஊழியர்கள் நிலை என்ன?! - Seithipunal
Seithipunal


காரைக்குடி பகுதியில் உள்ள பேக்கரியில் சமையல் கூடத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் அங்குள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின:

சிவகங்கை: காரைக்குடி கழனி வாசல் பகுதியில் பேக்கரி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று காலை கடையின் ஊழியர்கள் நாகராஜ், திருப்பதி ஆகியோர் அங்குள்ள சமையல் கூடத்தில் பலகாரம் தயார் செய்து கொண்டிருந்தனர். 

அப்போது, அங்கு அடுப்பில் வைத்து சூடேற்றபட்ட எண்ணெய் கொதித்து திடீரென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்ததால், சிறிது நேரத்தில் சமையல் கூடம் முழுவதும் தீ வேகமாக பரவியது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றுள்ளார். ஆனால் தீ பேக்கரி முழுவதும் பரவி எரிய தொடங்கியது.

உடனே அங்கிருந்த ஊழியர்கள் வெளியே வந்து, இது குறித்து தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, சுமார் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். 

இந்த தீ விபத்தில் பேக்கரியில் இருந்த ரூ.40 லட்சம் மதிப்புடைய உணவு பொருட்கள், பலகாரம் தயாரிக்கும் எந்திரங்கள் போன்றவை முழுவதுமாக எரிந்து சாம்பலாகின. காரைக்கடி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivaganga bakery shop fire rs40 lakes things destroyed


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->