மதுபோதையில் தகராற்றில் ஈடுப்பட்ட இளைஞர்.. தடிகேட்ட முதியவருக்கு அரிவாள் வெட்டு..! 
                                    
                                    
                                   Sickle cut for the elderly
 
                                 
                               
                                
                                      
                                            நகராட்சியின் ஈடுபட்ட இளைஞர்களை தட்டி கேட்ட முதியவரை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேர்ந்தவர் பிள்ளையார். இவர் உடல் நலக் குறைவு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்துள்ளார்.  அப்போது அதே பகுதியை சேர்ந்த இசக்கிராஜ் என்ற இளைஞர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அந்த சத்தம் அவருக்கு தொந்தரவாக இருக்கவே அந்த இளைஞரை பிள்ளையார் அங்கிருந்து வெளியேறி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இசக்கி ராசன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி கிடந்துள்ளார்.

இதனை கண்ட பிள்ளையாரின் மகள் தாக்குதலை தடுக்க முயன்றபோது அவரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். அவர்களை மீட்டு அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தப்பி ஓடிய இசக்கிராஜா தேடி வருகின்றனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       Sickle cut for the elderly