நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்துகள் - பயணிகளின் கதி என்ன?
seven peoples injured for govt bus accident in chennai
சென்னையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள வேளச்சேரி அருகே பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்து தண்டீஸ்வரம் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மற்றொரு அரசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் 7 பயணிகள் காயமடைந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் பேருந்துகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
seven peoples injured for govt bus accident in chennai