செ.பா. வழக்கு | தமிழக டிஜிபி, உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் - உச்சநீதிமன்றம் அதிரடி! - Seithipunal
Seithipunal


செந்தில் பாலாஜி மீதான குற்றப்பிரிவு வழக்கில் தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேலை வாங்கித்தருவதாக பணமோசடி செய்த வழக்கில், உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்து இருந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், செந்தில்பாலாஜி பணம் வாங்கிவிட்டு, அதை திருப்பி கொடுத்ததை நியப்படுத்த கூடாது என்ற நீதிபதிகள், இந்த வழக்கை இரு மாதத்தில் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில், செந்தில் பாலாஜி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், இறுதி விசாரணையை நிறைவு செய்ய கூடுதல் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் சமன் அனுப்பியுள்ளது.

எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்பதை டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் இந்த விஷயத்தில் நேரடியாக வந்து கேட்கட்டும் என்றும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், ஆறு மாத அவகாசம் எல்லாம் வழங்க முடியாது, குறைந்தபட்ச கால அவகாசம் மட்டுமே வழங்க முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

அப்போது காவல்துறை தரப்பில், வழக்கில் பலரிடமும் வாக்குமூலங்களை பெறுவது கடினமான பணி, பல பிரச்சனைகள் உள்ளது என்பதால் அவகாசம் தேவை என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்க்கு நீதிபதிகள், உங்களுக்கு பிரச்சனை என்பது எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும். உரிய காரணங்களை தெரிவித்தால் கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்து பரிசளிப்போம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji case SC order to DGP


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->