சர்வாதிகாரி போல செயல்படும் பிரதமர்... செல்வப்பெருந்தகை பரபரப்பு குற்றசாட்டு!
Selvaperunthagai dictator PM Modi
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,
மாநகராட்சி, ஊராட்சி தேர்தல் மாவட்ட தலைவர்கள் எப்படி பிரசாரம் மேற்கொள்கிறார்களோ அதுபோல் பிரதமர் மோடி பாராளுமன்ற தேர்தலுக்காக டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து போகிறார்.
தமிழ்நாட்டில் கால் பதிக்க முடியுமா என முயற்சி செய்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் பலிக்காது. இந்த மண் சமூக விடுதலைக்கான மண். சமூக நீதிக்கான மண்.
இந்த தேசத்தின் நன்மைக்காக இந்திரா காந்தி ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து எடுத்து வைத்தார். தற்போது கச்சத்தீவு பேசு பொருளாக மாறி உள்ளது.
ஆனால் ஏன் இது குறித்து மோடி பேசவில்லை. கடந்த 10 ஆண்டுகாலமாக பிரதமர் மோடி சர்வாதிகாரி போல தான் செயல்படுகிறார்.
காங்கிரஸ் ஆட்சியில் தான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. இதனால் தான் இந்தியா தலைநிமிர்ந்தது என தெரிவித்துள்ளார்.
English Summary
Selvaperunthagai dictator PM Modi