பிச்சு உதறிய மழை.!! அடுத்தடுத்து தமிழகத்தில் நடக்கப்போகும் மாற்றம்.!
sellur raju says about admk yagam
அதிமுக தலைமை யாகம் அறிவித்த உடனே சென்னையில் மழை பெய்து விட்டது, இதே போன்று தமிழகம் முழுவதும் மழை பெய்து, மக்களின் குடிநீர் பிரச்சினை தீரும் என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார்.
இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக சென்னையில் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதால் மக்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளனர். இருந்தபோதிலும் தண்ணீர் பிரச்சனை தீரவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் மழை வேண்டி யாகம் நடத்த அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இன்று பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் மழை வேண்டி யாகம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று சென்னை உட்பட பல்வேறு இடங்களில் மழை சற்று அதிகமாகவே பெய்துள்ளது.
இதனால், அதிமுக தலைமை யாகம் அறிவித்த உடனே சென்னையில் மழை பெய்து விட்டது, இதே போன்று தமிழகம் முழுவதும் மழை பெய்து, மக்களின் குடிநீர் பிரச்சினை தீரும் என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார்.
English Summary
sellur raju says about admk yagam