தற்கொலை செய்து கொண்ட கணவன்- மனைவி! போலீசாரின் அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


சேலம்: மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 46). இவர் கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 36). இவர் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். 

இவர்களுக்கு ரஞ்சித் (வயது 22) என்ற மகனும், நந்தினி (வயது20), அஞ்சலி (வயது 17) என மகள்களும் உள்ளனர். அஞ்சலியை நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றோர் விட்டில் இருந்த நிலையில், பள்ளி முடிந்து மாலை அஞ்சலி வீட்டிற்கு திரும்பி வந்தார். 

அப்போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் அஞ்சலி வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது பெற்றோர் இருவரும் இறந்த நிலையில் கிடந்தை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். அஞ்சலியின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். 

பின்னர் இது குறித்து மேட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதவை உடைத்து இறந்து கிடந்த ராஜா மற்றும் அவரது மனைவி சரஸ்வதி இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், கடந்த சில ஆண்டுகளாக ராஜாவுக்கும் அவரது மனைவி சரஸ்வதிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது. 

இதன் காரணமாக ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ள நிலையில் ராஜா, சரஸ்வதிக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். 

மேலும் தற்கொலைக்கான முழு காரணம் குறித்து, விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் அவர்களது தற்கொலைக்கான முழு காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Selam Husband and wife committed suicide


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->