பொய் வழக்கு.. உயிருக்கு அச்சுறுத்தல்... அபார்ஷன் செய்ய சொன்னாங்க.. அமைச்சர் சேகர் பாபுவின் மகள் பரபரப்பு பேட்டி..!!
Sekarbabu daughter Jaya accuses her father and police
தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சரின் மருமகன் சதீஷை சென்னை புளியந்தோப்பு போலீசார் இன்று மதியம் கைது செய்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் ஒருவரை காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக அமைச்சர் சேகர்பாபுவின் மருமகன் சதீஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
அந்த புகாரின் மீது விசாரணை நடத்திய போலீசார் இன்று அமைச்சர் சேகர்பாபுவின் மருமகன் சதீஷை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் சேகர்பாபுவின் மகள் ஜெயா செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது தனது தந்தை அமைச்சர் சேகர் பாபு மற்றும் காவல் துறையினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபுவின் மகள் ஜெயா பேசியதாவது "எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும்போது என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் வந்தது. குழந்தையை அபார்சன் செய்ய சொல்லி துன்புறுத்தினார்கள். பின்னர் என் கணவரை கைது செய்வேன் என மிரட்டினார்கள். குழந்தைக்காக நாங்கள் பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்தோம். இதனை அடுத்து பனிமலர் மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
தற்போது என்னுடைய மகளுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பனிமலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம். நான் மகளுடன் மேல் தளத்தில் மருத்துவரை பார்த்துக் கொண்டே இருக்கும்போது கீழே மருந்து வாங்கிக் கொண்டிருந்த என் கணவரை பி2 காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் இழுத்துச் சென்றனர். .
எங்களைப் பற்றி புகார் கொடுத்தவர் திமுகவில் கேமாரா மேனாக இருப்பவர். அவரை அடித்து வாட்ச் திருடினோம் என இந்திய குற்றவியல் சட்டம் 379ன் கீழ் பொய் வழக்கு போட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளனர். நாங்கள் திருடினோம் என்று வழக்குத் தொடுத்துள்ளார்கள். அது தெரிய வந்ததால் நாங்களாக ஆஜராக முன்வந்தோம். அப்படி வரும்போது தான் இந்த சம்பவம் நடந்தது என சேகர் பாபுவின் மகள் ஜெயா குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
Sekarbabu daughter Jaya accuses her father and police