கருணாநிதி மரணத்தில் மர்மம்..? கிளறி எடுக்கப்படும் மர்மங்கள் - பகீர் கிளப்பிய அதிமுக அமைச்சர் : வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


ஓட்டப்பிடாரம் தொகுதி கழக வேட்பாளர் பெ.மோகனுக்கு ஆதரவாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொகுதியில் தங்கி தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். புதியம்புத்தூர் சீனிவாசன் நகரில் வாக்குச்சாவடி முகவர்கள், நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், கருணாநிதி மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓட்டப்பிடாரம் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் என்னிடம் தெரிவித்தனர்.

தருவைகுளம் கிராமத்தில் நாங்கள் வாக்குசேகரிக்க சென்ற போது காலம் காலமாக திமுகவுக்கு வாக்களித்த ஒரு பெரியவர் என்னிடம் கூறும்போது கருணாநிதியை உயர் சிகிச்சைக்கு வெளிநாடு கொண்டு செல்லாமல் இங்கேயே வைத்து சரியான சிகிச்சை கொடுக்காமல் அவர் இறந்து விட்டார் என்றும் அவரது மரணத்திற்கு விசாரணை நடத்த வேண்டும்என்றும் இனி இரட்டைஇலை சின்னத்திற்கு தான் வாக்களிப்போம் என்றும் என்னிடம் அந்த முதியவர் தெரிவித்தார்.

ஓட்டப்பிடாரம் தொகுதி திமுகவினரின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் தேர்தல் முடிந்தவுடன் கருணாநிதி மரணத்தில் உள்ள மர்மம் குறித்து முதல்வர் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க உத்தரவிடுவார்.

தமிழக முதல்வர் உறுதியாக நடவடிக்கை எடுப்பார். ஓட்டப்பிடாரம் தொகுதி மக்கள் என்றுமே கழகத்தின் விசுவாசிகள். இந்த தேர்தலிலும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து கழக வேட்பாளர் மோகனை மாபெரும் வெற்றி பெற செய்ய வைப்பார்கள்' என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

secret behind karunanithi death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->