மாணவர்கள் "நலன் கருதி போராட்டம் வாபஸ்".!! - இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு.!!
Secondary school teacher protest temporarily postponed
கடந்த 19 நாட்களாக தமிழகத்தில் நீடித்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. சம வேலை சம ஊதியம், பழைய ஓய்வு புதிய திட்டம், காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்புதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்களை பேச்சு வார்த்தைக்கு வருமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதனை ஏற்று இன்று பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகள் உடன் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏட்டப்பட்டதால் இடைநிலை ஆசிரியரின் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளனர். மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
English Summary
Secondary school teacher protest temporarily postponed