கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கிய வாலிபர்.! தேடும் பணி தீவிரம்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய வாலிபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மகேஷா என்பவர் பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மகேஷா நண்பர்கள் 7 பேருடன் புத்தாண்டு கொண்டாடுவதற்காக புதுவைக்கு வந்துள்ளார்.

மேலும் இவர்கள் அனைவரும் கோட்டகுப்பம் அருகே உள்ள சின்ன முதலியார் சாவடியில் அறை எடுத்து தங்கினர். இதையடுத்து அனைவரும் அப்பகுதியில் உள்ள கடலில் குளித்த போது, திடீரென எழும்பிய ராட்சத அலை மகேஷாவை இழுத்துச் சென்றது.

இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டனர். இவர்களது சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியில் இருந்தவர்கள் உடனே கடலில் மகேஷ் சாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மகேஷாவை கண்டுபிடிக்க முடியாததால், இதுகுறித்து கோட்டகுப்பம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மகேஷாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

search for the young man who was caught in a giant wave while bathing in the sea is intense in Villupuram


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->