பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து சென்ற மாணவர்கள்.! வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


மாணவர்கள் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து கத்திக் கொண்டே பயணம் செய்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு.

10 முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளியில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அரசு பேருந்துகளில் 75% பயணிகள் மட்டுமே பயணிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் இருந்து வந்த அரசு பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பேருந்தின் மேற்கூரையில் ஏறி அமர்ந்து கொண்டு கோஷமிடுள்ளனர்.

இதனைக் கண்ட பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ஸேர் செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ பொதுமக்களிடையே வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

School students in bus top


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->