தருமபுரி || பேருந்தில் ஏறிய பள்ளி மாணவி நொடியில் உயிரிழந்த சம்பவம் - நடந்தது என்ன?
school student died accident in dharmapuri
தருமபுரி || பேருந்தில் ஏறிய பள்ளி மாணவி நொடியில் உயிரிழந்த சம்பவம் - நடந்தது என்ன?
தருமபுரி மாவட்டம் பூனாத்தன அள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் சக்திவேல் – சத்யா தம்பதியினர். இவர்களுக்கு நிஷாந்த்குமார், பிரவீன்குமார் என்ற மகனும், பிரியதர்ஷினி என்ற மகளும் உள்ளனர்.
இதில், பிரியதர்ஷினி பெரியாம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் பேருந்தில் பள்ளிக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், நேற்று காலை ஒன்பது மணியளவில், அவர் வழக்கம்போல் பேருந்து எண் 41-ல் பள்ளிக்கு செல்வதற்காக ஏறிய போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார்.
இது தெரியாமல் ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால், பின் சக்கரம் உடல் மீது ஏறி மாணவி பிரியதர்ஷினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அந்தத் தகவலின் படி போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
school student died accident in dharmapuri