கர்ப்பமான மாணவி - விசாரணையில் சிக்கிய பள்ளி மாணவன்.!
school student arrested for harassment in chengalpat
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியை சேர்ந்த பதினேழு வயது சிறுமி ஒருவர், செங்கல்பட்டு பகுதியில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் சிறுவன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததுடன் எல்லை மீறியும் நடந்து கொண்டுள்ளனர். இதற்கிடையே, சிறுமியின் நடவடிக்கையில் எழுந்த மாற்றத்தால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர், அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர்.
அதில், சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சிறுமிக்கு உடனடியாக கருக்கலைப்பு செய்திட வேண்டும் என்று மருத்துவரிடம் கேட்டுக் கொண்டனர். ஆனால், மருத்துவர்கள் சிறுமிக்கு 17 வயது என்பதால் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து, விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் 12 ம் வகுப்பு படிக்கும் காதலனான மாணவனை, போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school student arrested for harassment in chengalpat