கனமழை எதிரொலி., பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.!
school holiday due to heavy rain
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை பெய்து வந்தது.
இந்தநிலையில், வேலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு முதல் தற்போது வரை கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், வேலூர் மாவட்டத்தில் இரவு முதல் கனமழை பெய்வதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் கல்லூரிகள் வழக்கம் போல என தெரிவித்துள்ளார்.
அதே போல, காஞ்சிபுர மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது. இது தொடர்பாக அந்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், கனமழை பெய்வதால் காஞ்சிபுர மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
English Summary
school holiday due to heavy rain