திருமாவளவனின் கனவிற்கு விழுந்த பேரிடி!! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!!
sathya pratha sahu says about ponparappi issue
சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "பொன்பரப்பியில் பலர், வாக்களிக்க முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வருகின்றது.
எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 57 வது பிரிவின்படி மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். இதுகுறித்து மனுவை தேர்தல் ஆணைய தலைமை அதிகாரியிடம் கொடுத்துள்ளோம். அவர்கள் மனுமீது பரிசீலனை செய்வதாக கூறியுள்ளனர்." என தெரிவித்தார்.
இந்நிலையில் அவரது மனு பரிசீலனை செயப்பட்டு தேர்தல் ஆணையத்தின் முடிவு தற்பொழுது வெளியாகியுள்ளது. இதுகுறித்து , தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு, " பொன்பரப்பி வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு இல்லை" என தெரிவித்துள்ளார்.
திருமா மருவாக்குப்பதிவை எதிர்பார்த்து இருந்த நிலையில் இந்த முடிவு அவருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
English Summary
sathya pratha sahu says about ponparappi issue