#Breaking: தந்தை, மகன் உடலில் பலத்த காயங்கள்.. பதறும் நீதிபதிகள்..!!
Sathankulam murder case court judge comment sad
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் ஆனது, பல தரப்பிலிருந்தும் காவல்துறைக்கு கண்டனங்களை பெற்று வருகிறது. தந்தை, மகனின் மரணத்திற்கு பல தரப்பில் இருந்து நீதி கேட்டு போராட்டங்கள் மற்றும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடுத்தடுத்து வலுத்து வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக முதல்வர் அறிவித்து இருந்தார்.
நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், காவல்துறை ஆய்வாளர் தரப்பில் நீதிபதிக்கு பகிரங்க மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் பல தகவல் வெளியானது. மேலும், நீதிபதியும் தனது அறிக்கையில் காவல் அதிகாரியின் மிரட்டலை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், ஜெயராஸ் மற்றும் பெண்ணிக்ஸ் வழக்கில், இருவரின் உடலிலும் மோசமான காயங்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விசாரணையை தமிழக அரசு துவங்குவது தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், விசாரணை துவங்க தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் தடயம் மறைக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Sathankulam murder case court judge comment sad